அல் குர் ஆன் வசனங்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்... அன்புச்சகோதரர்களுக்கு : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!) 7:3 اتَّبِعُوا مَا أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُمْ وَلَا تَتَّبِعُوا مِن دُونِهِ أَوْلِيَاءَ ۗ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ 7:3. (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.

சூரா அல் ஃபாத்திஹா

அப்துர் ரஹ்மான் அல்சுதைசி

காலை மாலை துவாக்கள்

கோட்டைப்பட்டிணம் தர்ஹாவும்... அறங்கேரும் அனாச்சாரங்களும்....


வாருங்கள் வழக்காடுவேம் மறுமையிலே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்…)
     கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இந்த மடல். அன்புள்ளம் கொண்ட கோட்டைப்பட்டிணம் வாழ் சகோதரர்களே இந்த மடலின் மூலம் உங்களை சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். 

இஸ்லாம் ஒன்றை ஹராம்மாக்கினால் அது நமக்கும்தானே ஹராம்..? நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒன்றை தடைசெய்தார்கள் என்றால் அது நாமக்கும்தானே…? இஸ்லாம் தோன்றுவதர்க்கு முன்பு இருந்த மூடப்பலக்கங்கள் அனைத்தையும் நபிகள் நாயகம்(ஸல்லல்) அவர்கள் தடைசெய்து இருக்கின்றார்கள் அல்லவா…அப்படி இருக்கையில் இதை நாம் இன்றும் தொடர்ந்தாள்…? அதன் பொருள் நாம் இன்னும் சரியாக மார்க்கத்தை விளங்கிக்கோள்ளவில்லையா அல்லது அதை தெரிந்தே நாம் செய்கின்றோமா..? 

இஸ்லாம் தடைசெய்திருக்கும் மது, விபச்சாரம், வீன் விரயம், ஆடல் பாடல், நம் சமுதாயப் பென்கள் தன் கணவருக்கு காட்ட வேண்டிய அழகை மற்றவரகள் காண்பது போல் நடந்துகொள்வது (இதில் மாற்று மததினரும் அடங்கும்)   இப்படிப்பட்ட காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் உடந்தை என்றால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா…? ஒத்துக்கொண்டு தான் ஆகவேண்டும் ஆம் நமதூரில் வருடா வருடம் நடக்கும் கந்தூரி விழா தான் அது என்று இப்பொலுது உங்களுக்கு புரிந்திருக்கும்.

மது : நமதூரில் இருக்கும் மதுபானக்கடைகளுக்கு கந்தூரி என்று வந்தால் கடை வாசலில் விழாக்கோலம்தான். என்றும் இல்லாத அலவுக்கு மதுபானங்கள் இந்த குறிப்பிட்ட நாட்களில் விர்பனைகள் அமோகம் அல்லவா அதற்க்கு யார் காரணம்…? ராவுத்தரப்பா ஒளியுல்லாவா அல்லது நாமா…? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் அருமை சகோதரர்களே. இப்படிப்பட்ட இழிச்செயளுக்கு நாமும் ஓர் காரணம் தான்..! இது இஸ்லாத்தில் தடைசெய்ய்ப்பட்டதில் ஒன்று.

விபச்சாரம் : கந்தூரி என்று வந்துவிட்டால் நமதூரில் இருக்கும் விபச்சாரிகளின் கல்லா நிறைகின்றதாம். இதற்காக வெளியூர்களில் இருந்தும் இரக்குமதியாம் இவை இஸ்லாத்திர்க்கும் சத்திய மார்க்கத்திற்க்கும் தேவையான ஒன்றா..? ராவுத்தரப்பா ஒளியுல்லாவா அல்லது நாமா…? ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் அருமை சகோதரர்களே. இப்படிப்பட்ட இழிச்செயளுக்கு நாமும் ஓர் காரணம் தான்..! இதுவும் இஸ்லாத்தில் தடைசெய்ய்ப்பட்டதில் ஒன்று.

வீன் விரயம் : நம் சகோதரர்கள் சிலபேர் இப்படி பெருமையடித்துக் கொள்வதுண்டு எங்க ஊர்ள கந்திரிக்கு வாணவேடிக்கை மட்டும் இலட்ச்சங்களை தான்டும் என்பார்கள்… ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள் சகோதரகளே நமது ஊரில் எத்தனைபேர் வயது வந்த பெண்களை வைத்துக்கோண்டு திருமனம் செய்ய போதிய பொருளாதாரம் இல்லாமல் இருக்கின்றனர்..? எத்தனைபேர் நல்ல மதிப்பொன் எடுத்தும் மேலும் படிக்க பொருளாதார நெருக்கடியில் படிப்பை தொடரமுடியாத நிலை உள்ளது இவர்களுக்கு இந்த பொருளாதாரத்தை கொடுத்து உதவலாமே…

ஆடல் பாடல் : இது இஸ்லாத்தில் அனுமதித்த ஒன்றா…? இல்லை அப்படியிருக்க ஆடல் பாடல் என்று கூரி இஸ்லாமியப் பொன்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் அறைகுறை ஆடைகளுடன் ஆட்டம் பாட்டம் இதைச் செய்கின்றவர்களுக்கு நாள்ள வரவேற்ப்பு..! இப்படிப்பட்ட அறைகுறை ஆடைகளுடன் பார்ப்பதர்க்கு அனைவரும் வெட்க்கப்படவேண்டாமா..? இல்லை இதை நடத்துபவர்கள் இப்படி பார்க்க வேண்டும் என்றால் தங்கள் வீட்டில் வைத்து ஆடவிட்டு தன் குடும்பத்துடன் பார்க்க வேண்டியதுதானே அதைவிட்டுவிட்டு இப்படி பொது இடத்தில் கூத்தாடிகளை வைத்து நள்ளபெயர் வாங்க அவகளுக்கு வெட்க்கம் என்பது உண்டா என்பதில் எனக்கு மட்டும் அல்ல நமதூரின் மேல் அக்கறை கொண்ட அனைவருக்கும் சந்தேகம் வழுக்கிறது.

இந்த செயல்கள் தான் நம்மை சுவர்கத்திற்க்கு அலைத்துச்செல்லுமா..? நாம் கைச்சேதம் அடைந்தவர்களாக ஆகிவிடுவோம். மரணம் எத நேரத்திலும் வரலாம் ஜாக்கிரதை.

இப்படிப்பட்டவர்கள் ஏன் நமதூரில் ஏலை எளிய மக்களுக்கு பள்ளிகள் கட்டி அதுவும் இஸ்லாமிய அடிப்படையில் இலவசமாக கொடுக்க முனவரக்கூடாது…?

சரி இப்படிப்பட்ட செயல்களினால் நாம் தான் உணையான முஸ்லீம் என்று நிரூபிக்கமுடியுமா…? அல்லது இப்படி செய்வதனால் ராவுத்தரப்பா உள்ளம் குழுந்து நீங்கள் கேட்டவற்றை தந்துவிடப்போகின்றார்களா…? அல்லது இது எங்கள் ஊரின் பொருமை என்று பேசிக்கொள்ளும் பலருக்கு சுவர்ங்கம் தான் கிடைத்துவிடுமா…? இது நமதூரின் அவமானச்சின்னம் அல்லவா…?
உங்கள் சகோதரிகள், மணைவி மற்றும் அனைத்து இஸ்லாமியப்பெண்களின் கற்ப்புக்கும் பங்கம் விளைவிக்கும் நாமே முன்னின்று நடத்தும் இப்படிப்பட்ட விழா யார் பெயரால் நடத்தப்படுகின்றது..? இந்த ராவுத்தரப்பா பெயரில் தானே யாருடைய கணவிலாவது வந்து ராவுத்த்ரப்பா இப்படி உங்களைச் செய்ய சொன்னார்களா…?

அல்லாஹ் சுவர்க்கத்திற்க்கு அலகிய நருமனம் வீசக்கூடிய காற்றையும் நரகத்திற்க்கு நெருப்பையும் கூறுகின்றான். ஆனால் நாம்மில் பலர் கபுருக்கு அருகில் ஊது பத்தி என்ற நெருப்பை ஏற்றி அந்த பாவாவிற்க்கு நரக வேதனையைத் ததுகிறார்கள். கண்டிப்பாக இதற்க்கான தண்டனை நாளை மறுமை நாளில் அனைவருக்கும் உண்டு.

இப்படி செய்வதனால் மறுமைநாளில்  ராவுத்தரப்பா நம் அனைவர்மீதும் பழிசுமத்தி வழக்காடும் நிலை வரும். அந்த நாட்க்கள் வெகுதூரத்தில் இல்லை… நாம் எல்லாம் இஸ்லாமியர்கள் என்ற ஒரேகாரணத்தினால் இதைச் சொல்கின்றேன்… நாம்மெல்லாம் சத்தியமார்க்கத்திர்க்கு கட்டுப்பட்டவர்கள் என்பதினால் இதைச் சொல்கின்றேன்… நாமொல்லாம் இணைவைப்பு, சிர்க்குகளுக்கு எதிரிகள் என்பதனால் இதைச்சொல்கின்றேன்… இப்படிப்பட்ட இழின்செயளிள் இருந்து நமதூரை பாதுகாக்க வேண்டிய கடமை நம் ஒவொருவர் மீதும் உள்ளது அதை மணதில் வைத்து நம் அனைவரும் செயல்படவேண்டும்.

எனவே அன்புச் சகோதரர்களே நிச்சயமாக கந்தூரி, அதன் பெயரில் அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சடங்குகள் செய்வது ஆகிய அனைத்தும் அல்லாஹ் விற்க்கு இணைக்கற்ப்பிப்பது போன்றதாகும். ஹராமான செயல்கள் இதைச் செய்கின்றவர்கள், செய்யத்தூண்டுபவர்கள், இதில் களந்துகொள்கின்றவர்கள் அனைவரும் மார்க்கதுக்கு புரம்பான மாற்று மதத்தாரின் கொள்கையைப் பின்பற்றக்கூடியவர்கள். அல்லாஹ் இப்படிப்பட்ட செயல்களை கூறும் பொழுது அறியாமைக்காலச் செயல்கள் என்றுதான் திறுமரையாம் குர் ஆனில் கூறுகின்றான் இந்த அறியாமைக்கால செயல்களில் இருந்து நம் அனைவறையும் காத்துக் கொள்வேம். நாளை மறுமையில் நமக்காக சொர்க்கத்தில் நுலைவிக்ககூடிய செயல்களைச் செய்வோம்… நரக நெருப்பில் இருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்வேம்.

எப்படி அம்மாப்பட்டிணத்தில் வட்டி ஒலிக்கப்பட்ட ஊர் என்று அதன் நுளைவாயிலில் போடப்பட்டுள்ளதே அதேபோல் நமதூரில் வட்டி, விபச்சாரம் ஆகிய இஸ்லாத்திர்க்கு எதிரான அனைத்தும் ஒழிக்கப்பட்ட ஊர் என்று வரவேண்டும்.

இதன் மூலம் பயனடைகின்றவர்கள் இதர்க்காக போர்க்கொடி தூக்குவார்கள் அதைக்கண்டு அஞ்சவேண்டாம் நாம அல்லாஹ்விற்க்கு கட்டுப்பட்டவர்கள். இதன் பயன் அவர்களுக்கு இம்மையில் என்றால் இதை எதிர்ப்பவர்களுக்கு பலம் மறுமையில் சகோதரர்கலே.

இன்ஷா அல்லாஹ் வருகின்ற வருடம் இவை அனைத்தும் ஒழிய நாம் பாடுபடவேண்டும். இதர்க்காக அனைவரும் தம் பங்களிப்பைதர தயாராக இருக்கவேண்டும் துவாச் செய்யுங்கள்…

இதை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாளும் அவர்களுக்காக வாருங்கள் வழக்காடுவேம் மறுமையிலே அல்லாஹ்விடத்தில். வஸ்ஸலாம்.
 தொடர்புக்கு : kottaipatinam@hotmail.com

















இது தான் இறையச்சமா...?



0 comments:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

குர்ஆனை அனைத்து மொழிகளிலும் படிக்க

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள் بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ


*.நபி (ஸல்) அவர்கள் பெயர் கேட்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.

அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார் மீதும் ஸலவாத்து சொல்வாயாக.


*.தூங்கும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ بِاسْمِكَ أَمُوتُ وَأَحْيَا

அல்லாஹும்ம பி(இ)ஸ்மி(க்)க அமூ(த்)து வஅஹ்யா

பொருள்: இறைவா! உன் பெயரால் நான் மரணிக்கிறேன்; (தூங்குகிறேன்) உன் பெயரால் உயிர் பெறுகிறேன். (விழிக்கிறேன்) ஆதாரம்: புகாரி 6325, 6324, 6314



*.தூங்கி எழுந்தவுடன் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா ப(இ)ஃத மா அமா(த்)தனா வ இலைஹின் னுஷுர்

பொருள்: எங்களை மரணிக்கச் செய்த பின் உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம்: புகாரி 6312, 6314, 6324, 6325, 7395


*.கழிவறையில் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْخُبُثِ وَالْخَبَائِثِ

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(இ)(க்)க மினல் குபு(இ)ஸி வல் கபா(இ)யிஸி. ஆதாரம்: புகாரி 6322

பொருள் :இறைவா! ஆண், பெண் ஷைத்தான்களிடமிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.கழிவறையிலிருந்து வெளியேறும் போது ஓதும் துஆ:

غُفْرَانَكَ

ஃகுப்(எ)ரான(க்)க

பொருள் : உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். ஆதாரம்: திர்மிதீ 7


*.வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ

பி(இ)ஸ்மில்லாஹி ரப்பி(இ) அவூது பி(இ)(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய

ஆதாரம்: நஸயீ 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்.) என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழி தவறி விடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.


*.பள்ளிவாசலுக்குள் நுழையும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

அல்லாஹும்மப்(எ)தஹ் லீ அப்(இ)வாப(இ) ரஹ்ம(த்)தி(க்)க

பொருள் : இறைவா! உனது அருள் வாசல்களை எனக்காகத் திறப்பாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 1165


*.தொழுகைக்கு ஊளூ செய்யும் போது ஓதும் துஆ:

بِسْمِ اللَّه


பி(இ)ஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் எனக் கூற வேண்டும்.


*.உளூச் செய்து முடித்த பின் ஓதும் துஆ:

أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ

அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅன்ன முஹம்மதன் அப்(இ)துல்லாஹி வரஸுலுஹு

பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனது தூதர் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 345


*.பாங்கு சப்தம் கேட்டால் ஓதும் துஆ:

பாங்கு சொல்லும் சப்தம் கேட்டால் முஅத்தின் கூறுவதை நாமும் திருப்பிக் கூற வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:புகாரி 611

*.பாங்கு முடிந்தவுடன் ஓதும் துஆ:

பாங்கு ஓதி முடிந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி விட்டு பின்னர் கீழ்க்காணும் துஆவை ஓத வேண்டும்.

اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ


அல்லாஹும்ம ரப்ப(இ) ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ப(எ)ளீல(த்)த வப்(இ)அஸ்ஹு மகாமன் மஹ்மூதன் அல்லதீ வஅத்தஹு

பொருள் : இறைவா! இந்த முழுமையான அழைப்பிற்கும், நிலையான தொழுகைக்கும் சொந்தக்காரனே! முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு (சொர்க்கத்தின் மிக உயர்ந்த பதவியான) வஸீலா எனும் பதவியினையும், சிறப்பையும் வழங்குவாயாக! நீ அவர்களுக்காக வாக்களித்த புகழப்பட்ட இடத்தில் அவர்களை எழுப்புவாயாக!

ஆதாரம்: புகாரி 614, 4719


*.பள்ளிவாசலை விட்டு வெளியேறும் போது ஓதும் துஆ:

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க மின் ப(எ)ழ்ளி(க்)க

பொருள் : இறைவா! உனது அருளை வேண்டுகிறேன். ஆதாரம்: முஸ்லிம் 1165


*.உண்ணும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி வ அலா ப‌ர‌(க்)க‌த்தில்லாஹி.

அல்லாஹ்வின் பெய‌ரைக் கொண்டும்,அவ‌ன‌து அபிவிருத்திக‌ள் த‌ரும் அருளைக் கொண்டும் உண்ண‌த் தொட‌ங்குகிறேன்.

*.சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் ஓதும் துஆ:

بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ

பிஸ்மில்லாஹி பீ(எ) அவ்வலிஹி வ ஆகிரிஹி எனக் கூற வேண்டும். ஆதாரம்: திர்மிதீ 1781


*.சாப்பிட்ட பின்பும் பருகிய பின்பும் ஓதும் துஆ:

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆதாரம்: முஸ்லிம் 4915


*.உணவளித்தவருக்காக ஓதும் துஆ:

اللَّهُمَّ بَارِكْ لَهُمْ فِي مَا رَزَقْتَهُمْ وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ

அல்லாஹும்ம பா(இ)ரிக் லஹும் பீ(எ)மா ரஸக்தஹும் வஃக்பி(எ)ர் லஹும் வர்ஹம்ஹும்.

பொருள் : இறைவா! இவர்களுக்கு நீ வழங்கியதில் பரகத் (மறைமுகமான பேரருள்) செய்வாயாக. இவர்களை மன்னிப்பாயாக! இவர்களுக்கு கருணை காட்டுவாயாக.

ஆதாரம்: முஸ்லிம் 3805


*.பயணத்தின் போது ஓதும் துஆ:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயணத்திற்காக தமது வாகனத்தில் எறி அமர்ந்ததும் மூன்று தடவை அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர், அல்லாஹு அக்ப(இ)ர் எனக் கூறுவார்கள். பின்னர்

سُبْحَانَ الَّذِي سَخَّرَ لَنَا هَذَا وَمَا كُنَّا لَهُ مُقْرِنِينَ وَإِنَّا إِلَى رَبِّنَا لَمُنْقَلِبُونَ اللَّهُمَّ إِنَّا نَسْأَلُكَ فِي سَفَرِنَا هَذَا الْبِرَّ وَالتَّقْوَى وَمِنْ الْعَمَلِ مَا تَرْضَى اللَّهُمَّ هَوِّنْ عَلَيْنَا سَفَرَنَا هَذَا وَاطْوِ عَنَّا بُعْدَهُ اللَّهُمَّ أَنْتَ الصَّاحِبُ فِي السَّفَرِ وَالْخَلِيفَةُ فِي الْأَهْلِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ وَعْثَاءِ السَّفَرِ وَكَآبَةِ الْمَنْظَرِ وَسُوءِ الْمُنْقَلَبِ فِي الْمَالِ وَالْأَهْلِ

ஸுப்(இ)ஹானல்லதீ ஸக்கர லனா ஹாதா வமா குன்னா லஹு முக்ரினீன். வஇன்னா இலா ரப்பி(இ)னா லமுன்கலிபூன். அல்லா ஹும்ம இன்னா நஸ்அலு(க்)க பீ(எ) ஸப(எ)ரினா ஹாதா அல்பி(இ)ர்ர வத்தக்வா வமினல் அமலி மா(த்)தர்ளா. அல்லாஹும்ம ஹவ்வின் அலைனா ஸப(எ)ரனா ஹாதா வத்வி அன்னா பு(இ)ஃதஹு, அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸாஹிபு(இ) பி(எ)ஸ்ஸப(எ)ரி வல் கலீப(எ)(த்)து பி(எ)ல் அஹ்லி அல்லா ஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் வஃஸாயிஸ் ஸப(எ)ரி வகாப (இ)தில் மன்ளரி வஸுயில் முன்கலபி(இ) பி(எ)ல் மாலி வல் அஹ்லி எனக் கூறுவார்கள்.

பொருள் :அல்லாஹ் மிகப் பெரியவன். எங்களுக்கு இதை வசப்படுத்தித் தந்தவன் தூயவன். நாங்கள் இதன் மேல் சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. மேலும் நாங்கள் எங்கள் இறைவனிடமே திரும்பிச் செல்பவர்கள். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தில் நன்மையையும், இறையச்சத்தையும், நீ பொருந்திக் கொள்கின்ற நல்லறத்தையும் உன்னிடம் வேண்டுகிறோம். இறைவா! எங்களின் இந்தப் பயணத்தை எங்களுக்கு எளிதாக்கு! இதன் தொலைவை எங்களுக்குச் குறைத்து விடு! இறைவா! நீயே பயணத்தில் தோழனாக இருக்கிறாய். எங்கள் குடும்பத்தை நீயே காக்கிறாய். இறைவா! இப்பயணத்தின் சிரமத்திலிருந்தும், மோசமான தோற்றத்திலிருந்தும் செல்வத்திலும் குடும்பத்திலும் தீய விளைவுகள் ஏற்படுவதிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 2392


*.பயணத்திலிருந்து திரும்பும் போது ஓதும் துஆ:

மேற்கண்ட அதே துஆவை ஓத வேண்டும். அதைத் தொடர்ந்து

آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ

ஆயிபூ(இ)ன தாயிபூ(இ)ன ஆபி(இ)தூன லிரப்பி(இ)னா ஹாமிதூன்.

பொருள் :எங்கள் இறைவனை வணங்கியவர்களாகவும், புகழ்ந்தவர் களாகவும் மன்னிப்புக் கேட்பவர்களாகவும் திரும்புகிறோம்.
ஆதாரம்: முஸ்லிம் 2392


*.தும்மல் வந்தால் ஓதும் துஆ:
தும்மல் வந்தால் தும்மிய பின்

الْحَمْدُ لِلَّهِ

அல்ஹம்து லில்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் :எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே.

அல்ஹம்துலில்லாஹ் என தும்மியவர் கூறுவதைக் கேட்டவர்

يَرْحَمُكَ اللَّهُ

யர்ஹமு(க்)கல்லாஹ் எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உனக்கு அருள் புரிவானாக!

இதைக் கேட்டதும் தும்மியவர்

يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ

யஹ்தீ(க்)குமுல்லாஹு வயுஸ்லிஹு பா(இ)ல(க்)கும்

எனக் கூற வேண்டும்.

பொருள் : அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! உங்கள் காரியத்தைச் சீராக்குவானாக!

ஆதாரம்: புகாரி 6224


*.பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ:

கீழ்க்காணும் துஆவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இதன் பொருள் :இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம்: புகாரி 6306


*.புத்தாடை அணியும் போது தூஆ

அல்ஹம்து லில்லாஹில்லதீ கஸானீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின்ம் மின்னீ வலா குவ்வத்தின்.

இவ்வுடையை எனது முயற்சியோ,சக்தியோ இன்றி எனக்கு அளித்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!


*.தூங்கி எழுந்த‌வுட‌ன் ஓதும் தூஆ

அல்ஹ‌ம்து லில்லாஹில்ல‌தீ அஹ்யானா பஅத‌ மா அமாத‌னா வ‌ இலைஹின் நுஷூர்.

நாம் (சிறிய‌ மௌத்தாகிய‌ தூக்க‌த்தில்) இற‌ந்த‌ பின்ன‌ர் ந‌ம்மை உயிர் பெற‌ச் செய்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*.க‌ளா (இய‌ற்கைத் தேவைக்காக‌ப்) போகும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ இன்னீ அஊது பிக‌ மின‌ல் ஃகுபுஃதி வ‌ல் ஃக‌பாஇஃதி.

அல்லாஹ் ! நான் தீய‌ ஆண்,பெண் ஷைத்தான்க‌லிட‌மிருந்து உன்னிட‌ம் பாதுகாவ‌ல் தேடுகிறேன்.


*.இய‌ற்கைத் தேவையை நிறைவேற்றி விட்டு வெளியே வ‌ரும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்!நான் உன்னிட‌ம் பாவ‌ம‌ன்னிப்புத் தேடுகிறேன். என்னை விட்டுத் துன்ப‌ம் த‌ர‌க்கூடிய‌தை நீக்கி, என‌க்குச் சுக‌ம் த‌ந்த‌ அல்லாஹ்வுக்கே எல்லா புக‌ழும்!


*கண்ணாடி பார்க்கும் போது ஓதும் தூஆ

அல்லாஹ்! நீ எனது படைப்பை அழகாக்கி வைத்தது போல், எனது குணத்தையும் அழகாக்கி வைப்பாயாக!


*.வீட்டை விட்டு வெளியேறும் போது ஓதும் தூஆ

பிஸ்மில்லாஹி த‌வ‌க்க‌ல்து அல‌ல்லாஹி லா ஹ‌வ்ல‌ வ‌லா குவ்வ‌த்த‌ இல்லா பில்லாஹில் அலிய்யில் அளீம்.

அல்லாஹ்வின் திருநாம‌த்தைக் கொண்ன்டு(வெளியேறுகிறேன்). அல்லாஹ்வின் மீதே ந‌ம்பிக்கை வைக்கிறேன்.தீமையை விட்டுத் திரும்புவ‌தும், ந‌ன்மையைச் செய்யும் ச‌க்தியும் மேலான‌, ம‌க‌த்தான‌ அல்லாஹ்வைக் கொண்டே அன்றி இல்லை.


*.பிறையைக் க‌ண்ட‌தும் ஓதும் தூஆ

அல்லாஹும்ம‌ அஹில்ல‌ஹூ அலைனா பில் யும்னி வ‌ல் ஈமான் வ‌ஸ்ஸ‌லாம‌த்தி வ‌ல் இஸ்லாம் வ‌த்த‌வ்ஃபீகி லிமா துஹிப்பபு வ‌த‌ர்ளா.

அல்லாஹ்! இந்த‌ பிறையை அபிவிருத்து உள்ள‌தாக‌வும், ஈமானையும் இஸ்லாமையும் சாந்தியையும் இன்னும் நீ விரும்ப‌க் கூடிய‌வ‌ற்றையும், பொருந்திக் கொள்ள‌க் கூடிய‌வ‌ற்றையும் செய்வ‌த‌ற்கு வாய்ப்பையும் த‌ர‌க் கூடிய‌தாக‌வும் வெளியாக்கி வை! (பிறையே!) என‌து ர‌ப்பும், உன‌து ர‌ப்பும்
அல்லாஹ் தான்!


*.வீட்டிற்குள் நுழையும் போது ஓதும் தூஆ

அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக ஃகைரல் மவ்லஜி வஃகைரல் மஃக்ரஜி பிஸ்மில்லாஹி வலஜ்னா வபிஸ்மில்லாஹி ஃகரஜ்னா அலல்லாஹி ரப்பினா தவக்கல்னா.

அல்லாஹ்! நிச்சயமாக நான் சிறந்த நுழைதலையும், சிறந்த வெளியேறுதலையும் உன்னிடத்தில் கேட்கிறேன். அல்லாஹ்வின் பெயரைக்கொண்டே நாம் நுழைகிறோம். அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே நாம் உள்ளே வெளியேறுகிறோம். மேலும், நமது ரப்பாகிய அல்லாஹ் மீதே நம்பிக்கை வைக்கிறோம்.

*. ஜும் ஆ நாள் அஸருக்குப் பின் ஓதும் ஸலவாத்

அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முகம்மதினின் நபிய்யில் உம்மிய்யி வ அலா ஆலிஹி வ அஸ்ஹாபிஹி வஸல்லிம் தஸ்லீமா

அல்லாஹ்! உம்மி நபியாகிய எங்கள் தலைவரான முகம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்கள் கிளையார், தோழர்கள் மீதும் அதிகமான ஸலவாத்தும் ஸலாமும் சொல்வாயாக!